தமிழ்நாடு
ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட உள்ளது.
ஜெயலலிதாவின் நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் கட்டப்பட்டு வந்தது. சுமார் 80 கோடி ரூபாய் செலவில், பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணிக்குத் திறந்து வைக்கிறார்.
நினைவிடத்தின் திறப்பு விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர், தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.