இந்தியா
சொகுசு பங்களாவில் போதை விருந்து: நடிகைகள், பிக்பாஸ் போட்டியாளர்கள் சிக்கியதால் பரபரப்பு!
சொகுசு பங்களா ஒன்றில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக கேள்விப்பட்ட காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தபோது பிக்பாஸ் போட்டியாளர்கள், தென்னிந்திய நடிகைகள் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற நகரில் உள்ள சொகுசு பங்களா ஒன்றில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திடீரென போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அந்த பங்களாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்தை அந்த விருந்தில் பயன்படுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து போதைப்பொருள் பயன்படுத்திய 22 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் பிக்பாஸ் போட்டியாளர் என்றும் நான்கு பேர் தென்னிந்திய நடிகைகள் என்றும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதன் பின் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விருந்தை ஏற்பாடு செய்த நைஜீரிய பெண் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் விருந்து விவகாரத்தில் தென்னிந்திய நடிகைகள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.