தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் ஜாமின் மனு தள்ளுபடி: நீடிக்கும் ஜெயில் வாழ்க்கை!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது சிறை வாழ்க்கையை நீடித்து வருகிறது.
திமுக தொண்டர் ஒருவர் கள்ள வாக்கு போட முயன்றதாக குற்றம் சாட்டி அவரை அரைநிர்வாணப்படுத்தி தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஜெயகுமார் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து அவர் மார்ச் 7ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட இருந்த நிலையில் அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்
இந்த நிலையில் இன்று அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுமதி இன்றி திடீரென சாலையில் மறியல் செய்ததாகவும் இதனால் தொற்று பரவ காரணமாக இருந்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவிடப்பட்டது
இந்த நிலையில் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் தன்னை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.