தமிழ்நாடு
பைத்தியம் முற்றிவிட்டது: சசிகலா ஆடியோ குறித்து கே.சி.பழனிசாமி!
எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை கூறி உள்ளதாக சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சசிகலாவுக்கு பைத்தியம் முற்றி விட்டது என முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழியாகவும் பணிப்பெண்ணாகவும் வந்தவர்தான் சசிகலா என்பது உலகறிந்த உண்மை. ஜெயலலிதாவுடன் வருவதற்கு முன்னர் அதிமுகவில் என்ன நடந்தது என்றே சசிகலாவுக்கு தெரியாது. ஆனால் சசிகலா எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறியதாக கூறி இருப்பதைப் பார்க்கும்போது அவருக்கு பைத்தியம் முற்றி விட்டதாக தெரிகிறது என்றும் கூறியுள்ளார்
இது போன்ற தவறான தகவல்களை சசிகலா வெளியிடுவது தவறு என்று கூறிய் முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி, எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவில் இணைவதற்கு அவர் முயற்சி செய்யலாம், அதிமுகவின் தொண்டர்களுடன் அவர் பேசலாம், அதில் ஒன்றும் தவறு இல்லை, ஏனெனில் அவர் ஜெயலலிதாவுடன் இருந்தவர் என்பதற்காக அந்த உரிமை உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி எம்ஜிஆருக்கே நான்தான் ஆலோசனை கூறினேன் என்று கூறுவது அதிமுக உறுப்பினராவதற்கு கூட அவர் தகுதி இல்லாதவர் என்று தெரிய வருகிறது. அண்ணா திமுக தொண்டர்களை அந்த அளவுக்கு முட்டாளாக சசிகலா அவர்கள் நினைக்கக்கூடாது, இது மாபெரும் ஆணவப்போக்கு’ என்று அவர் தெரிவித்துள்ளார்.