சினிமா செய்திகள்

மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் சரத்குமார் – ராதிகா!

Published

on

நம்ம ஊரு அண்ணாச்சி, சூர்யவம்சம் படங்களை தொடர்ந்து ரியல் ஜோடியான சரத்குமார் மற்றும் ராதிகா மீண்டும் ஜோடியாக தமிழ் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

மணிரத்னத்தின் உதவி இயக்குநரும் படைவீரன் படத்தை இயக்கிய தனா, அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து எடுக்கும் புதிய படத்தில் தான் இந்த நட்சத்திர ஜோடி இணைந்துள்ளது.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியனும், விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கின்றனர்.

மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக இயக்குநர் மணிரத்னமே இந்த படத்தின் கதை மற்றும் வசனத்தை எழுதுகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

seithichurul

Trending

Exit mobile version