வணிகம்
பட்ஜெட் 2021: இந்தியாவின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!
நாட்டு மக்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கும் 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்ய உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு பொருளாதாரம் மீட்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றில் இந்தியாவின் வேகமான வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு இந்த பட்ஜெட் விளக்கம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 11 மணியளவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். வளர்ச்சி பணிகள், வரி விலக்கு, வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு போன்றவை பட்ஜெட்டில் முக்கியமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இதுவரை இந்தியா பார்க்காத ஒரு பட்ஜெட்டாக இந்த முறை இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 2021-2022-ம் நிதியாண்டுக்கான பொருளாதார சர்வேயில், இந்தியாவின் பொருளாதாரம் 11 சதவீதம் வரை வளர்ச்சியைக் காணும் என்று தெரிவித்துள்ளனர்.
பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் எப்போது இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளன.. முதலீட்டாளர்களுக்குச் சாதகமான அறிவிப்புகள் வந்தால் பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொடும்.
கொரோனா ஊரடங்கின் போது 40 சதவீதம் சரிந்த பங்குச்சந்தை, பின்னர் புதிய உச்சங்களைத் தொட்டது.
NPS திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு வரி சேமிப்பு உட்பட மேலும் பல்வேறு அறிவிப்புகளை 2021 பட்ஜெட்டில் அறிவிப்புகள் வரலாம்.