வணிகம்
2020-ம் ஆண்டு இந்தியாவின் மிக நீண்ட பட்ஜெட்டை வாசித்த நிர்மலா சீதாராமன்!
2020-ம் ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததே இந்தியாவின் மிக நீண்ட பட்ஜெட் உறையாக உள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-ம் ஆண்டு 2 மணி நேரம் 41 நிமிடம் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்யும் போது அவருக்குத் தொண்டை பிரச்சனை ஏற்பட முழுமையாக வாசிக்காமல் சில உள்ளடக்கத்தையும் ஒதுக்கினார்.
அதற்கு முன்னதாக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்தார்.
அதிக வார்த்தைகளைக் கொண்ட பட்ஜெட் உரையாக, 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட் உரை உள்ளது. இந்த பட்ஜெட் உரையில் மன்மோகன் சிங் 18,650 வார்த்தைகளை வாசித்து இருந்தார்.