தமிழ்நாடு
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழகத்திற்கு 1.55 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் நீர் அதிகளவில் வருவதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நீர்வள ஆணையம் 4வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.