இந்தியா
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 3 நாட்களில் ரூ.4 கோடி இழப்பு!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மூன்றே நாட்களில் ரூபாய் 4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு கணக்கிடப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக திருப்பதியில் பெய்த கனமழை காரணமாக திருமலை திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதன் காரணமாக ரூபாய் 4 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் திருப்பதி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்துள்ளது பெரும் பாதிப்பு அடைந்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருமலை-திருப்பதி தேவஸ்தான பொறியியல் நிபுணர்கள் சேத மதிப்பை கணக்கிட்டுள்ளனர். இதில் திருமலை திருப்பதி மலையில் ரூபாய் நான்கு கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது.