தமிழ்நாடு

தமிழகத்தில் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள்: எந்தெந்த ரயில்கள் தெரியுமா?

Published

on

பெரும்பாலும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு உள்ள ரயில்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முன்பதிவு இல்லாமல் ஒரே ஒரு பெட்டி மட்டுமே இருக்கும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒரு ரயில் முழுவதும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட உள்ளதாகவும் முதல் கட்டமாக 5 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க இருப்பதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

1. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்- கொல்லம்

2. மதுரை- இராமேஸ்வரம்

3., திருச்செந்தூர்- திருநெல்வேலி

4. செங்கோட்டை- திருநெல்வேலி

மேற்கண்ட ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லா பொது பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் மே மாதம் 30 முதல் இயக்கிட தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது.

5. கோயமுத்தூர்- மேட்டுப்பாளையம் இடையே மே 23 முதல் எக்ஸ்பிரஸ் வண்டி பொது பெட்டிகளுடன் இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

தென்னக ரயில்வேயின் இந்த உத்தரவு அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

Trending

Exit mobile version