இந்தியா

இன்று இரவு எக்ஸிட்போல் முடிவுகள்: வெற்றி பெறுவது யார்?

Published

on

தமிழகம், கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் தேர்தல் முடிவடைவதால் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு எக்ஸிட் போல் என்னும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாக உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 8ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்றுடன் அனைத்து தேர்தலும் முடிவடைவதை அடுத்து தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு அனைத்து கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட உள்ளன.

இன்றைய கருத்துக்கணிப்பில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வெற்றிபெறும் கட்சிகள் யார் யார் என்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிட இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் ஒரு சில கருத்து கணிப்புகள் மட்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறியிருந்தது. இன்று வெளியாகும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது திமுகவா? அதிமுகவா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேபோல் கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஆளும் கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version