இந்தியா

ஊரடங்கில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு.. மத்திய அரசு அதிரடி!

Published

on

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மீனவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த ஊரடங்கு விலக்கு மூலம், மீன் பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மீனவர்கள் கடலுக்குச் செல்லவும், மீன்களை விற்கவும், மீன் படிக்கவும், மீன் வளர்ப்பு சார்ந்த தொழிலுக்குக்குணம் விலக்கு உண்டு.

அதே சமயம் தனிமனித இடைவேளி போன்ற கட்டுப்பாட்டுக்களை கடைபிடிப்பது, சுகாதார நடவடிக்கைகள் போன்றவை கட்டாயம்/. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version