கிரிக்கெட்

சென்னையில் இந்தியா- இங்கி., முதல் டெஸ்ட்… வலுவான நிலையில் இங்கிலாந்து அணி..!

Published

on

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது.

இந்திய அணி பந்துவீச இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளும் அஷ்வின் 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இன்றைய போட்டியில் சதம் விளாசி இங்கிலாந்து அணியை வலுவான இடத்துக்கு தூக்கிச் சென்றுள்ளார். இன்றைய நாளின் முடிவில் கேப்டன் ஜோ ரூட் 128 ரன்கள் விளாசி உள்ளார். இன்றைய நாளின் முடிவில் மொத்தம் 89.3 ஓவர்கள் வீசப்பட்ட்டுள்ளன.

Trending

Exit mobile version