கிரிக்கெட்

பிங்க் பந்துகளில் முதல் போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி- உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Published

on

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியே பிங்க் பந்துகளில் ஆடும் பகலிரவு போட்டியாக அமைந்துள்ளது. முதல் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. கடைசியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதிய டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி மாபெரும் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்திருந்தது. ஏறத்தாள அதே நட்சத்திர அணியுடன் இம்முறையும் இந்திய அணி களம் இறங்கியுள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் பங்கேற்ற ஒரு நாள் போட்டித் தொடரில் தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது. அதன் பின்னர் டி20 போட்டிகளில் இழந்த வெற்றியை 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று இந்திய அணி அசத்தியது. தற்போதைய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version