கிரிக்கெட்
முதல் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இன்று தொடங்கியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் பின்னர் நடத்தப்பட உள்ள நிலையில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. முதல் போட்டியானது நாக்பூரில் இந்திய நேரமான 9:30 க்கு ஆரம்பமாகியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடி வருகிறது.
மேலும் இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளனர். கடந்தகால ஆட்டங்களில் இரு அணிகளுக்கும் இடையே அதிகமான வார்த்தை மோதல் நிலவி வருவதால் இந்த டெஸ்ட் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.