உலகம்

ஒமிக்ரான் வைரசுக்கு முதல் பலி: அதிர்ச்சி தகவல்!

Published

on

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் படிபடியாக பரவி வரும் நிலையில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸுக்கு ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதல் முதலாக ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டறியப்பட்டர். அதன் பின்னர் பிரேசில், ஹாங்காங், அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் ஒமிக்ரான் பரவியது என்பது குறிப்பாக பிரிட்டனில் மிக அதிகமாக தற்போது பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் பிரிட்டனில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவித்துள்ளார். உலகிலேயே ஒமிக்ரான் வைரஸால் முதல் பலி ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரிட்டன் அரசு ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version