Connect with us

தமிழ்நாடு

இரவுநேர ஊரடங்கால் அதிகாலையிலேயே பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்!

Published

on

தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்று அதிகாலையிலேயே வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்தவிதமான போக்குவரத்தும் இருக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து இரவு முழுவதும் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இன்று அதிகாலை 4 மணிக்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல தொடங்கி விட்டனர்.

மேலும் ஆட்டோ கார் ஆகியவற்றில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் இன்று காலை அதிகரித்ததாக தெரியவந்தது. இன்று காலை 4 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தேனீர் கடைகள் உள்பட ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முதல் நாள் இரவு நேர ஊரடங்கை அனுபவித்த பொது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக அதிகாலையிலிருந்தே வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூர் செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் சென்னையை விட்டு பலர் காலி செய்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் தங்களது மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதனால் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல் ஆனது என்பதும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் புதுவையில் முழு ஊரடங்கு உத்தரவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா43 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!