தமிழ்நாடு

கொளுந்துவிட்டு எரியும் ராஜபாளையம் சஞ்சீவ் மலை: போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்!

Published

on

ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையத்தில் சஞ்சீவி மலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ சுமார் 3 கிலோமீட்டர் அளவிற்கு பரவியிருப்பதாகவும், தூரத்திலிருந்து பார்க்கும்போது தீபம் ஏற்றுவது போல் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த மலையின் அடிவாரத்தில் தான் மலையடிப்பட்டி என்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளது என்பதும் அங்கு இலட்சக்கணக்கானோர் குடியிருந்து வருவதாகவும் மலையடிப்பட்டி வரை தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்த தகவல் அறிந்ததும் ராஜபாளையம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கு சமூக விரோதிகள் காரணமா? என்பது குறித்து விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Trending

Exit mobile version