சினிமா செய்திகள்

ஆபாச பட விவகாரம்: நடிகை மற்றும் கணவர் மீது குற்றப்பத்திரிக்கை

Published

on

ஆபாச பட விவகாரத்தில் பிரபல நடிகை மற்றும் அவரது கணவர் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே என்பதும் அவருடைய கணவர் சாம் பாம்பே என்பதும் தெரிந்ததே. நடிகை பூனம் பாண்டே தனது சமூக வலைத்தளத்தில் ஆபாசமான அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண வீடியோவை பதிவு செய்வார் என்பதும், இதற்கென தனியாக பிரத்யேகமாக அவர் இணையதளமும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கோவா சென்றிருந்த போது அங்கு கடற்கரையில் போது ஆபாச படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகார் வந்ததையடுத்து காவல்துறையினர் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்தனர். 4 பிரிவுகளில் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோது பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version