சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்துக்கு அடுத்த பிரச்னை… தயாரிப்பாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு..!

Published

on

மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது காவல் நிலையத்தில்  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் நாளை ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில் நேற்றே மாஸ்டர் திரைப்படத்தின்  40 நிமிடங்களுக்கான வீடியோ காட்சிகள் துண்டு துண்டாக ஆன்லைனில் கசிந்தது. இன்று ஆன்லைனில் லீக் செய்தவரை காவல்  துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து நேற்று ஒரு போலீஸ் பிரச்னை முடிந்த நிலையில் இன்று புதிய போலீஸ் வழக்கு பதிவாகி உள்ளது. மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 2020 மார்ச் மாதம் நடத்தப்பட்டது. அப்போது மாஸ்டர் படத்தைத் தாண்டி நடிகர் விஜய் நடித்த வேறு சில படங்களில் இருந்தும் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அது தொடர்பாக தனியார் பாடல் காப்புரிமை நிறுவனம் ஒன்று புகார் கொடுத்துள்ளது.

காப்புரிமையை மீறி ஆடியோ வெளியீட்டு விழாவில் வேறு பாடல்கள் ஒலிபரப்பியதால் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மாஸ்டர் படத்துக்கு தேவசியில்லாத கூடுதல் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version