இந்தியா
உத்திர பிரதேசத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கைதா? நடந்தது என்ன?
உத்திர பிரதேசத்தில் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது தொடக்கப்பட்ட வழக்கிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த மோடி ஆதரவாளர் ஒருவர், மோடியை அவதூறு செய்யும் வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பலர் தன்னை மிரட்டுவதாகக் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் 14 பேர் மீது பிப்ரவரி 6-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வாழக்கை விசாரித்த போது இதில் சுந்தர் பிச்சைக்கும், கூகுளின் பிற ஊழியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. சுந்த பிச்சை மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அறிந்த மாவட்ட நிர்வாக அலுவலர்கள் சுந்தர் பிச்சை கூகுள் மூலம் இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீட்டை செய்கிறார். இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று காவல் துறையினரிடம் ட்
சுந்தர் பிச்சை பெயர் நீக்கப்பட்டாலும், அந்த மோடி ஆதரவாளரை மிரட்டியது யார் என்று உத்திர பிரதேச காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.