தமிழ்நாடு
தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியம் விடுவிப்பு!
மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை உள்ள 17 மாநிலங்களுக்கு 5-ம் தவணை தொகையாக 9,871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.
வருவாய்ப் பற்றாக்குறை மானியம் என்றால் என்ன?
கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மத்திய, மாநில அரசுகளின் வருவாய் பாதிக்கப்பட்டது. எனவே வருவாயைக் காட்டிலும் செலவினங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்க 1,18,452 கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என 15வது நிதிக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
இந்த வருவாய் பற்றாக்குறை மானியம் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது.
முன்னதாக 4 தவணையை மத்திய அரசு வழங்கியிருந்தது. இப்போது 5வது தவணையாக 9,871 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அதில் தமிழகத்துக்கு 183.67 கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இப்போது விடுவித்துள்ள 5வது தவணை வருவாய்ப் பற்றாக்குறை மானியத்துடன் சேர்த்து 49,355 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.