உலகம்

உ.பி மர்டர்.. இறுதி சடங்கின் இறுதி நொடியில் கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ்

Published

on

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ரமேஷ் யாதவின் மகன் அபிஜித் யாதவ் நேற்று மரணம் அடைந்தார். மது போதையில் இருந்த அபிஜித் யாதவ் அப்படியே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அபிஜித் யாதவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, போதை காரணமாக பின் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவ அறிக்கை அப்படித்தான் அளிக்கப்பட்டுள்ளது.ளார்.

இந்த நிலையில் போலீஸ் அபிஜித் யாதவின் கழுத்தில் கை தடங்களை போலீசார் கவனித்து இருக்கிறார்கள். இதனால் உடனே சடங்கை நிறுத்த சொல்லி, அபிஜித் உடலை பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

பிரேத பரிசோதனையில் அபிஜித் கழுத்து நெறிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கடைசியில் சந்தேகம் வரவே அபிஜித் யாதவின் அம்மா மீரா யாதவ் விசாரிக்கப்பட்டு பின் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மீரா யாதவ், அபிஜித் யாதவை கொன்றது தான்தான் என்று போலீசில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். குடித்துவிட்டு வந்ததால் கோபம் தாங்காமல் இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version