இந்தியா

அமைதியான முறையில் நடைபெற்று வரும் கடைசிக் கட்டத் தேர்தல்!

Published

on

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் 2019-ம் கடைசிக் கட்டத் தேர்தலான இதில் 59 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இமாச்சல பிரதேசம்,பஞ்சாப், சண்டிகர், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்திரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

மொத்த 1.12லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று மாலைக்குள் யார் அடுத்த 5 ஆண்டுக்காலத்திற்குப் பிரதமர் என்பது தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்ட மன்றத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

seithichurul

Trending

Exit mobile version