டிவி

பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கிடையில் எழுந்த சண்டை!

Published

on

பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி இதுவரை 5 நாட்களாகியுள்ள நிலையில் பெண்கள் இடையில் இதுவரை பெரிய சண்டை ஏதும் வரவில்லை.

இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் ரேகா, சனம் ஷெட்டி இடையில் சமைப்பதில் ஏற்பட்ட குழப்பத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. அதைச் சமாதானம் முயற்சியில் ரம்யா பாண்டியன் ஈடுபடுகிறார்.

நேற்றைய பிக்பாஸ் எபிசோடில், ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் பருப்பு சாம்பார் சாதம் (பிசிபேலே பாத்) செய்வதற்குப் பருப்பு ஊர வைத்து வேக வைத்தனர்.

ஆனால், சாம்பார் சாதத்தை சனம் ஷெட்டி சமைப்பதாகக் கூறியிருந்தார். அது குறித்து படுக்கை அறையில் படுத்திருந்த சனம் ஷெட்டியிடம் நடிகை ரேகா கேட்ட பொழுது, நீங்கள் சாம்பார் சாதம் செய்கிறீர்கள் என்றால் செய்யுங்கள். நான் குழித்துவிட்டு நிதானமாக வருகிறேன். இல்லை என்றால் இப்போதே செய்துவிடுகிறேன் என்று கூறியிருந்தார்.

அதில் ஏற்பட்ட குழப்பம் இன்று சண்டையாக உருவாகியுள்ளது. அதன் முன்னோட்டமாக இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version