தமிழ்நாடு

மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்: முதல்வர் அறிவிப்பு!

Published

on

இன்று காலை சென்னை தலைமை செயலகம் அருகே மரம் விழுந்ததால் பெண் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மரம் விழுந்ததால் மரணம் அடைந்த பெண் காவலர் கவிதா அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 10 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூபாய் 15 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பலியான பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே விபத்தில் காயமடைந்த காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில் குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிவாரண உதவி அளிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version