தமிழ்நாடு
பாஜகவை ஒரு இடத்தில் கூட ஜெயிக்க விடமாட்டோம்: விவசாயிகள் அதிரடி அறிவிப்பு!
நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜகவை ஜெயிக்க விட மாட்டோம் என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக டெல்லியில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்து வரும் விவசாயிகள் சங்கம் தற்போது அதிரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்க உள்ளது.
இதுகுறித்து விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது ’தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பாஜகவை தோற்கடிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வோம். பாஜகவை ஒரு இடத்தில் கூட ஜெயிக்க விடமாட்டோம். விவசாயிகளுக்கு துரோகம் செய்த மோடி அரசின் சதிகளை நாங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்’ என்று தெரிவித்தார்.
மேலும் விவசாயிகள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜகவை ஜெயிக்க விடமாட்டோம் என விவசாயிகள் சங்கம் அதிரடியாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.