Connect with us

இந்தியா

அடுத்ததாக நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் – விவசாயிகள் அதிரடி அறிவிப்பு; என்ன செய்யும் மத்திய அரசு?

Published

on

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர். கடைசியாக அவர்கள் குடியரசு தினமான, ஜனவரி 26 ஆம் தேதி, டிராக்டர் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இந்நிலையில் மீண்டும் மத்திய அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் புது வித போராட்ட யுக்தியைக் கையில் எடுக்க உள்ளனர்.

அதன்படி, வரும் சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். அதன்படி சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கம் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்குக் கடந்த சில நாட்களாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல போராட்டக் களத்திற்கு மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதியையும் துண்டித்துள்ளது அரசுத் தரப்பு. இதற்கு எதிராகவும் போராட்டம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.

மேலும் நேற்று, தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2021 மீதும் விவசாய சங்கத் தலைவர்கள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். ‘விவசாயிகள் இந்த பட்ஜெட்டில் முழுவதுமாக புறந்தள்ளப்பட்டு உள்ளார்கள். வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப் பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கடைசியாக குடியரசு தினத்தன்று விவசாயிகள், டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணி, வன்முறையில் முடிந்தது. அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்றைய தினம், விவசாயிகளின் ஒரு பகுதியினர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, தேசியக் கொடிக்கு பதிலாக தங்களது கொடியை ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்படி வன்முறையில் முடிந்த பேரணியால், விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்கிற குரல்கள் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் பெரும்பான்மையான விவசாய சங்கங்கள், ‘எங்கள் போராட்டம் அற வழியில் மட்டும் தான் நடக்கும். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் வெளியில் இருந்து ஊடுருவி போராட்டத்தை குலைக்க முயல்கிறார்கள். அனைத்து வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை’ எனத் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!