தமிழ்நாடு

டெல்லியை அடுத்து சென்னையிலும் போராட்டம்.. சென்ட்ரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Published

on

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்போது தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

Trending

Exit mobile version