இந்தியா
இதுதாண்டா விவசாயி: ஆணிகளுக்கு அருகில் பூக்கள் வைத்த பெரிய மனது!
மத்திய அரசின் புதிய வேளாண்மை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் வட இந்திய விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது என்பதும் இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் டெல்லி நகருக்குள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக எல்லையில் ஆணிகளால் வைத்து வேலி அமைக்கப்பட்டது. டெல்லி போலீசாரின் இந்த செயல் பெரும் கண்டனத்திற்கு உள்ளான நிலையில் தற்போது எல்லையில் வைக்கப்பட்ட ஆணிகள் அருகிலேயே விவசாயிகள் மலர்களை வைத்து தங்களுடைய பெரிய மனதை வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப காஸிப்பூர் எல்லையில் விவசாயிகளை தடுக்க சாலையில் போலீசார் இரும்பு ஆணிகள் வைத்த நிலையில் அந்த இரும்பு ஆணிகள் அருகிலேயே பூச்செடிகளை நட்டு பதில் கொடுத்துள்ளனர் விவசாயிகள். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ’இதுதாண்டா விவசாயி’ ’இதுதாண்டா விவசாயிகளின் பெரிய மனது’ என்று நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்