இந்தியா
வெட்டுக்கிளிகளை பூச்சிக்கொல்லிகள் மூலம் அழிக்க முயலும் விவசாயிகள்!
#WATCH Madhya Pradesh: Farmers in Budhni and Nasrullaganj of Sehore district beat utensils in a bid to scare away swarms of locusts that attacked their farms. Disinfectants are also being sprinkled on trees and crops to protect them from locusts. pic.twitter.com/tLahQqz8Ej
— ANI (@ANI) May 26, 2020
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விளை பயிர்களை வெட்டுக்கிளிகள் வேகமாக அழித்து வருகின்றன.
வெட்டுக்கிளிகளை எதிர்த்துப் போராடத் துணிந்துள்ள விவசாயிகள் சிலர், மரங்கள், செடிகள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து வருகின்றனர்.
பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அடிப்பதன் மூலம் உணவு தானியங்கள், காய்கறிகள் அதிகளவில் நச்சுத்தன்மை அடையும். அதனால் ஏற்படும் விளைவுகள் வெட்டுக்கிளிகளால் ஏற்படும் உணவுப் பஞ்சத்தை விட கொடுமையானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்ற வாரம் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலான வெட்டுக்கிளி கூட்டம் உத்திரப்பிரதசேத்தை நோக்கி வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
https://seithichurul.com/life-style/natural-ways-to-protect-plants-crops-and-grains-from-grasshoppers-locusts-in-tamil/22974/