இந்தியா

தோனியை பார்க்க 1436 கி.மீ தூரம் நடந்தே போன ரசிகர்… வைரல் புகைப்படம்…

Published

on

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் அதிக ரசிகர்களை பெற்றிருப்பவர் கேப்டன் தோனிதான். காரணம் அவரின் கூலான அணுகுமுறைதான். கோபப்பட மாட்டார். தோல்வியில் துவண்டு போக மாட்டார். இக்கட்டான நிலையில் திறமையாக விளையாடி அணியை வெற்றி பெற வைப்பார், உலக கோப்பையையே வென்றாலும் கூலாக இருப்பார் என இவரிடம் பாராட்டும் படியான பல விஷயங்கள் உள்ளது.

ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து விலகிய இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டின் ஐபில் போட்டியில் அவரின் தலைமையில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திறமையாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது.

How Pakistan-south Africa series affect csk

உலகமெங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அவரை காணவும், தொட்டு பார்க்கவும், ஒரு செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் பலரும் தவம் கிடக்கின்றனர்.

dhoni

இந்நிலையில், அஜய் கில் என்கிற ரசிகர் ஹரியானாவில் இருந்து தோனி தங்கியுள்ள ராஞ்சி நகருக்கு 1436 கி.மீ நடந்தே சென்று தோனியை சந்தித்துள்ளார். 18 நாட்கள் அவர் நடந்து சென்று ராஞ்சி நகரை அடைந்துள்ளார். ரசிகரின் இந்த செயலை கண்டு மனம் உருகிய தோனி, அவரை தனது பண்ணை வீட்டில் தங்க வைத்து, அவருக்கு தேவையான உதவிகளை புரிந்து, வீடு திரும்ப விமானத்தில் டிக்கெட் புக் செய்து கொடுத்துள்ளார்.

இந்த தகவலை தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Trending

Exit mobile version