சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ FDFS-க்கு டிக்கெட் வாங்க தள்ளு முள்ளுவில் ஈடுபட்ட ரசிகர்கள்; காற்றில் பறந்த கொரோனா!

Published

on

தளபதி விஜய் நடிப்பில் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது மாஸ்டர் திரைப்படம். இதையொட்டி, நேற்று முதல் தியேட்டர் கவுன்ட்டர்களில் டிக்கெட் விற்பனை ஆரம்பமானது. ஆன்லைன் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, கோயம்பேடு ரோகினி தியேட்டரில் விஜய் படங்களுக்குப் பெரும் வரவேற்பு இருக்கும். இந்த திரையரங்கில் பெரிய ஹீரோ படங்களை முதல் நாள், முதல் காட்சி பார்ப்பது என்பதை சினிமா ரசிகர்கள் விரும்புவார்கள்.

இந்நிலையில் நேற்று ரோகினி தியேட்டர் கவுன்ட்டரில் மாஸ்டர் படத்துக்கான முதல் நாள் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. அதை வாங்க ரசிகர்கள் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் வீரியமாக இருக்கும் நிலையில் ரசிகர்கள், மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் டிக்கெட் வாங்குவதிலேயே கவனம் செலுத்தினார்கள். இது குறித்தான படங்கள் மற்றும் காணொலிக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாஸ்டர் ரிலீஸ் அன்று தியேட்டர்களில் இன்னும் அதிக கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா பரவல் அச்சமும் அதிகரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version