கிரிக்கெட்

IPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க!

Published

on

ஐபிஎல் தொடரில் இன்று  14வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஐதராபாத் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி, அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. பஞ்சாப் அணி பரிதாபகரமாக 8வது இடத்தில் நிலை கொண்டுள்ளது. முதல் இடத்தில் தான் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆர்.சி.பி, முதலிடத்தில் இருக்கிறது. சென்னை அணி, மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக இரண்டாவது விக்கெட்டுக்குப் பின்னர் கிறிஸ் கெய்லுடன் விளையாட சக மேற்கிந்தியத் தீவுகள் வீரரான நிகோலஸ் பூரன் களத்துக்கு வந்தார். கெய்ல் சிங்கிள் எடுக்க ஓட, பூரனும் ஓடினார். பந்து டேவிட் வார்னர் கைக்குப் போக அவர் பூரனை ரன் அவுட் செய்தார். பந்து எதுவும் பிடிக்காமலேயே ஆட்டமிழந்து வெளியேறினார் பூரன். 

இதுவரை பூரன், ஐபிஎல் 2021ல் 4 போட்டிகள் விளையாடி அதில் மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன்னரும் அவர் இப்படி ரன் அவுட் ஆகி ரசிகர்களின் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார். இதனால் அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன. 

Trending

Exit mobile version