இந்தியா

வாவ் சூப்பர்.. பெங்களூரில் வரப்போகும் பிரமாண்ட பேஸ்புக் அலுவலகம்!

Published

on

பெங்களூர்: பெங்களூரில் பேஸ்புக் நிறுவனம் மிக பிரமாண்டமான அலுவலகம் ஒன்று கட்ட இருக்கிறது.

ஆசியாவில் இது பேஸ்புக்கின் மிகப்பெரிய அலுவலகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.பெங்களூரின் சல்லங்கத்தா பகுதியில் உள்ள எம்பசி கோல்ப் லிங்க் பிசினஸ் பார்க்கில் இந்த நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.

இங்கு என்ன மாதிரியான பணிகளை செய்ய போகிறார்கள் என்று இதுவரை விளக்கப்படவில்லை.  இங்கு 3000 பேர் வரை வேலை பார்க்க போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சம் 10 அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெங்களூரில் ஏற்கனவே அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் இருக்கிறது. இப்போது பேஸ்புக்கும் களமிறங்கி உள்ளது.

வால்மார்ட் ஸ்டிரிட் ஆவணங்களின் படி பேஸ்புக், அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவற்றை சேர்த்து  எஃப்எஎஎம்ஜி (என்று அழைப்பார்கள். உலகில் மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே இந்த ஐந்து நிறுவனங்களும் செயல்படுகிறது. அந்த பெரும் பெங்களூருக்கு வந்துள்ளது.

 

 

 

 

Trending

Exit mobile version