உலகம்

மீண்டும் 7000 ஊழியர்கள் பணிநீக்கமா? என்ன நடக்குது ஃபேஸ்புக் நிறுவனத்தில்?

Published

on

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்தில் கடந்த 11 கடந்த சில மாதங்களுக்கு முன் 11 ஆயிரம் பேர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டனர் என்பதும் உலகின் மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும் விமர்சனம் செய்யப்பட்டது. இதனை அடுத்த தற்போது மீண்டும் 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது பேஸ்புக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000 ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணவீக்கம் சரிந்தது என்பதும், பொருளாதார நிலை ஏற்பட்டதோடு, வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துக் கொண்டே வருவதால் நிறுவனங்களின் லாபம் குறைந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து நிறுவனங்களின் லாப சரிவை தடுத்து நிறுத்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் கூகுள் பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் ஆயிர க்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பேஸ்புக் நிறுவனம் தற்போது ஊழியர்களின் பணி திறமைக்கு ஏற்ப மதிப்பெண்களை வழங்கி வருவதாகவும் இதில் குறைந்த மதிப்பெண்களை பெற்றவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஏழாயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் ஃபேஸ்புக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

டிசிஎஸ் தவிர உலகின் அனைத்து நிறுவனங்களும் வேலைநீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் இதை தடுத்து நிறுத்த வழியே இல்லையா என்ற கேள்விதான் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இனி எந்த நிறுவனத்தையும் நம்பி வாழ்க்கையை ஓட்ட முடியாது என்றும் சொந்த தொழில் ஒன்றே சிறந்தது என்று இளைஞர்கள் முடிவெடுக்கக்கூடிய நேரம் வந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version