Connect with us

வணிகம்

இனி அரசியல் வெறுப்பு பேச்சுக்களுக்கு இடமில்லை.. சாட்டையை சுழற்றிய பேஸ்புக்.. எங்கெல்லாம் கட்டுப்பாடு தெரியுமா?

Published

on

உலகின் மிகப்பெரிய சோஷியல் மீடியா நிறுவனமான பேஸ்புக் குறிப்பிட்ட சில நாடுகளில் அரசியல் தொடர்பான பதிவுகளை பயனாளர்களின் டைம்லைனில் இருந்து குறைக்க போவதாக அறிவித்துள்ளது.

இப்பொது இருக்கும் சமூக ஊடகங்களில் முதன்மையானது பேஸ்புக். உலகம் முழுவதிலும் இருந்து பல பில்லியன் பயனாளர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தொடங்கி அரசுக்கு எதிரான போராட்டங்கள் வரை பல்வேறு நிகழ்வுகள் பேஸ்புக் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

சமீபத்தில் மியான்மரில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதேநேரம் தேவையற்ற வன்முறைகளும், வெறுப்பு பேச்சுக்களும், சண்டைகளும் பேஸ்புக் மூலம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

மியான்மரில் நடைபெற்ற மதரீதியிலான வன்முறைகளும், இந்தியாவில் நடைபெற்ற சில கலவரங்களும் அதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த நிலையில் தான் இதுபோன்ற நிகழ்வுகளை காரணம் காட்டி, குறிப்பிட்ட சில நாடுகளில் அரசியல் ரீதியிலான பதிவுகளை பயனர்களின் டைம்லைனில் இருந்து குறைக்கும் முடிவை மேற்கொள்ள போவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

இந்த வாரத்தில் இருந்து கனடா, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள பயனர்களுக்கான பேஸ்புக்கில் இருந்து அரசியல் உள்ளடக்கத்தை தற்காலிகமாகக் குறைக்கும். அதேபோல வரும் வாரங்களில் அமெரிக்காவிலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கடந்த ஜனவரி மாதம் அரசியல் வெறுப்பு பேச்சுக்களின் தாக்கத்தை குறைக்க விரும்புவதாக கூறினார். ஏனெனில் மக்கள் எங்கள் தளத்தில் அரசியலை விரும்பவில்லை, மற்றும் அதனால் ஏற்படும் சண்டைகள் அவர்களின் அனுபவங்களை எடுத்துக்கொள்வதையும் விரும்பவில்லை என்றார்.

பேஸ்புக் சமூக வலைத்தளம் வெறுக்கத்தக்க பதிவுகளை சரியாக நீக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் குடிமை மற்றும் அரசியல் குழுக்களை பயனர்களுக்கு பரிந்துரைப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்தது.

அடுத்த சில மாதங்களில், அரசியல் உள்ளடக்கத்திற்கான மக்களின் மாறுபட்ட விருப்பங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், அந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் பல அணுகுமுறைகளை சோதிப்பதற்கும் நாங்கள் பணியாற்றுவோம். முதல் கட்டமாக, இந்த வாரம் கனடா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா நாடுகளிலும் வாரங்களில் அமெரிக்காவிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு அவர்களுடைய டைம்லைனில் அரசியல் உள்ளடக்க தகவல்களை தற்காலிகமாக குறைப்போம் என்று கூறப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் குறித்த நம்பகமான தகவல்களை மக்களிடையே தக்கவைத்துக்கொள்வதற்காக உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களுக்கு மட்டும் இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

இருப்பினும் பேஸ்புக்கின் இந்த முடிவு ஒரு பக்கம் சாதகமானதாக தெரிந்தாலும் மறுபக்கம் பாதகமான அம்சங்கள் இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது மக்களை எதை பார்க்க வைக்க வேண்டும் என கட்டளையிடும் சர்வாதிகார நடவடிக்கை, சில நேரங்களில் அரசாங்கங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெறும் சமயத்தில் இதுபோன்ற வாய்ப்பை அரசுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

author avatar
seithichurul
வணிகம்3 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!