Connect with us

தமிழ்நாடு

ஃபேஸ்புக் பழக்கம்: பெண்ணாக நடித்த ஆணிடம் 80 ஆயிரத்தை இழந்த பரிதாபம்!

Published

on

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த 45 வயதான தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் காயத்ரி என்ற பெயருடைய நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. காயத்ரி ஃபேஸ்புக்கில் அழகான பெண்ணின் புகைப்படம் ஒன்றை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ஃபேஸ்புக் மூலமாக பேசி வந்துள்ளனர். அப்போது காயத்ரி என்ற பெயரில் உள்ள நபர் தனக்கு வாய் பேச முடியாது எனவும், திருமணமாகி கணவர் வெளிநாட்டில் உள்ளார் எனவும் தற்போது வீட்டில் தனியாக உள்ளதாக தனசேகரனிடம் கூறியுள்ளார். இவரும் தங்கள் செல்போன் எண்களை மாற்றிக்கொண்டு வாட்ஸ்அப்பிலும் பேசி வந்துள்ளனர்.

ஒருநாள் தனக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும், பணத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் காயத்ரி என்ற பெயரில் உள்ள நபர் கூற, தனசேகரன் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதனையடுத்து அவரை நாகர்கோவிலுக்கு வரவழைத்து அவரை வேறுறொரு வாலிபரை துணைக்கு அழைத்து தாக்கியுள்ளார் காயத்ரி என்ற பெயரில் இருந்த ஆண்.

அப்போது தான் தனசேகரனுக்கு தான் ஏமாந்தது தெரியவந்துள்ளது. தனசேகரை தாக்கிய அந்த நபர்கள் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்து சென்று அதன் மூலம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும் அந்த வாலிபர்கள் தங்கள் பைக்கில் தனசேகரனை ஏற்றிக்கொண்டு போய் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த நபர் வடசேரி காவல்நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் குமரி மாவட்ட காரங்காடு கல்லுவிளையை சேர்ந்த பொன்னுலிங்கம் மற்றும் செருப்பங்கோடை சேர்ந்த சிவலிங்கம் என்பவர்கள் தான் இந்த மோசடியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதும் இதையையே வழக்கமாக கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!