தமிழ்நாடு

23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் இயங்கும் மற்றும் தமிழகம் வழியாக செல்லும் 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் தினத்தில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர் செல்ல உள்ளதை அடுத்து வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயங்கி வருகின்றன என்பதும் அதற்கான முன் பதிவு ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏராளமானோர் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கூடுதல் பெட்டிகளுக்கு ஏற்கனவே வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

பொங்கல் சிறப்பு தினத்தை ஒட்டி கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறையின் அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மற்றும் தமிழகம் வழியாக இயங்கும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் ரயில்களின் விவரம் இதோ:

 

 

seithichurul

Trending

Exit mobile version