உலகம்

ஆப்கானில் பயங்கர குண்டு வெடிப்பு… இதுவரை 15 பேர் பலி..!

Published

on

ஆப்கானிஸ்தானில் தற்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் இதுவரையில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலின் போது வழிபாட்டுத் தலம் ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதில் 15 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் காயம் அடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளன. வெடிகுண்டு மத்திய ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள வழிபாட்டுத் தளத்தில் வெடித்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்தித்துறை தொடர்பாளார் தாரிக் ஆர்யன் வெளியிட்டுள்ளார். வழிபாட்டு இடத்தில் குரான் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்று வந்ததாகவும் தெரிகிறது. வெடிகுண்டு அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரிக்‌ஷா ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version