தமிழ்நாடு

நீட் தேர்வு நடைபெறும் மையங்கள்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Published

on

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இருந்தது. ஆனால் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சற்று முன் நீட் தேர்வு மையங்கள் எந்தெந்த இடத்தில் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு மையங்கள் குறித்தும் ஓஎம்ஆர் தாளை பூர்த்தி செய்யும் நடைமுறைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கும் மாணவர்கள் உடனடியாக மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று நீட் தேர்வு மையங்கள் மற்றும் ஓஎம்ஆர் தாள் பூர்த்தி செய்யும் நடைமுறைகளை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Trending

Exit mobile version