தமிழ்நாடு
குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்
![2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/2.jpg)
சென்னை: குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குட்கா ஊழல் குறித்து ஜார்ஜ் விளக்கம் அளித்தார்.
அதில்,குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். இதில் பணம் கைமாறி இருக்கிறது.
குட்காவை வைத்து முறைகேடு நடந்து இருக்கிறது. இதுகுறித்து நான் கொடுத்த புகார்களை விசாரிக்கவில்லை.
ஆனால் யாருக்கு பணம் சென்றது என்று தெரியாது. அதை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.