தமிழ்நாடு
ஓட்டுக்கு 5000 ரூபாய் கேளுங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவனின் சர்ச்சை பிரச்சாரம்!
இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது தேனி தொகுதி. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தேனி மக்களவை தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஆளுங்கட்சியினர் ஆளுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் 500 ரூபாய் கொடுத்தால் வாங்காதீர்கள். 5000 ரூபாய் கேளுங்கள் என சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய இளங்கோவன், அவர்கள் கொடுக்கும் பணம் அவர்கள் உழைத்தது அல்ல. உங்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணம் அது. இத்தனை நாட்களாக உங்களை எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள். எனவே பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுவிட்டு, கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.