சினிமா செய்திகள்

எல்லாம் விஜய் கொடுத்த ஊக்கம் தான் – மனம் திறந்த அருண் விஜய்!

Published

on

அருண் விஜய் நடிப்பில் மார்ச் 1 வெளியான தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், கவின், எழில் என இரு கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆக்‌ஷன், காதல், பாடி லேங்குவேஜ் என எல்லா இடங்களிலும் அருண்விஜய் சிக்ஸர் அடித்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தொடர் தோல்வியால் மனம் துவண்ட என்னை நடிகர் விஜய் தான் ஊக்கம் தந்து மீண்டும் உற்சாகத்துடன் நடிக்க வைத்தார்.

ஜனனம் படத்தின் தோல்வியால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். அப்போது என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னை தயாரிப்பு பணிகளில் ஈடுபட கூறினர். நடிப்புத் தொழிலையும் விட்டு விட அறிவுறுத்தினர். ஆனால், அப்போது நான் விஜய்யை சந்தித்து பேசினேன். நீங்கள் நல்ல நடிகர், என்னை விட நன்றாக சண்டை போடக் கூடியவர், நல்ல டான்சர், நல்ல கதைகளை தேர்வு செய்து நடியுங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என உற்சாகமூட்டினார்.

அந்த உற்சாகம் தான் என்னை வெற்றி பாதைக்கு அழைத்து வந்து நிறுத்தியுள்ளது என அருண்விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version