சினிமா செய்திகள்

அடுத்த ஜென்மம் எடுத்தாலும்… நான் நடிகை தான் – நதியா சுவாரஸ்ய பேட்டி!

Published

on

எவர்க்ரீன் நடிகை என்றால் அந்த பட்டியலில் நிச்சயமாக நடிகை நதியாவின் பெயர் இடம்பெற்றிருக்கும். 4 வருடங்கள் மட்டுமே நாயகியாக நடித்த நதியா, ரஜினி, மோகன், சத்யராஜ், பிரபு உள்ளிட்டோருடன் நடித்து பல ஹிட்களை கொடுத்தவர். பின்னர், திருமணமாகி வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகி, சினிமா வாழ்க்கையை துறந்தார்.

இது ரசிகர்கள் மற்றும் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர், எம்.குமரன் சன் ஆப் மகாலக்‌ஷ்மி படத்தில் அழகிய அம்மாவாக அசத்தல் ரீ- என்ட்ரி தமிழ் சினிமாவில் கொடுத்தார். மேலும், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அம்மா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “ நடிகையாக வேண்டும் என நான் ஆசைப்படவில்லை. ஆனால், எனக்கு வந்த வாய்ப்புக்கு சின்சியிராக நடித்துக் கொடுத்தேன். 4 வருடங்களிலேயே நடிப்பை விட்டு விட்டேன். உச்சத்தில் இருக்கும் நடிகை இப்படி ஏன் செய்தீர்கள், என்று அன்புடன் பல திரையுலக நட்சத்திரங்கள் என்னிடம் கேட்டனர். திரும்பவும் ரீ-என்ட்ரி கொடுத்தது மகிழ்ச்சி தான். அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால், அதில் நிச்சயம் நடிகையாக பிறக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். நிச்சயம் நடிப்புக்கு மட்டுமே அந்த ஜென்மத்தில் பாடுபடவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்றார்.

Trending

Exit mobile version