சினிமா செய்திகள்

ஒரே பாடலில் அனிருத்-ஜிவி பிரகாஷ்: சூப்பர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

Published

on

ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடல் பாடுவது தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஆனால் ஒரு இசையமைப்பாளரின் இசையில் இரண்டு இசையமைப்பாளர்கள் பாடியுள்ளது இதுதான் முதல் முறை என்று தெரியவருகிறது.

அந்த பாடல் இமான் இசையில் அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் பாடியுள்ள பாடல் என்பதும் இந்த பாடல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற படத்திற்காக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

இந்த பாடலை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயற்றி உள்ளதாகவும், இந்த பாடலை அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து பாடி உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பிப்ரவரி 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version