தமிழ்நாடு
அந்த ரகசியத்தை இப்போதாவது பயன்படுத்தலாமே? உதயநிதியை கிண்டல் செய்த ஈபிஎஸ்!
உதயநிதியின் ரகசியத்தை இப்போதாவது திமுக பயன்படுத்தலாமே என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்ற ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றும் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அந்த ரகசியத்தை இன்னும் பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இயற்ற உள்ளதாகவும் இதற்காக பிப்ரவரி 8ஆம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் கூட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து கூறிய போது தமிழகத்திற்கு நீட் விலக்கு பெறுவது எப்படி என்பது குறித்த ரகசியத்தை உதயநிதியிடம் கேட்டு அதை இப்போதாவது திமுக பயன்படுத்தலாமே என கிண்டல் அடித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்து அதன் பின் தற்போது வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது தான் திமுகவின் வழக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.