தமிழ்நாடு

மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல்; ஈபிஎஸ் விளாசல்

Published

on

மக்களை ஏமாற்றுவது ஒன்று தான் திராவிட மாடல் என்று ஓராண்டு திமுக ஆட்சியை கடுமையாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளாசியுள்ளார்.

பொங்கல் தினத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் தராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த ஆண்டு மட்டுமல்ல அடுத்து வரும் நான்கு ஆண்டுகளிலும் தர மாட்டார்கள் என்றும் ஆனால் ஒவ்வொரு ஆண்டும், அடுத்த ஆண்டு தருவோம் அடுத்த ஆண்டு தருவோம் என்று கூறி ஏமாற்றுவார்கள் என்றும், மக்களை ஏமாற்றுவது ஒன்று தான் திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை என்றும் இதுதான் திராவிட மாடல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் கூறியபோது ஓர் ஆண்டு திமுக ஆட்சி பாஸ்மார்க் வாங்கவில்லை என்றும் ஃபெயில்ஆகிவிட்டது என்றும் கூறினார். அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி எதுவுமே முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறிய திமுக, ஒரு ஆண்டு ஆகியும் நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version