Connect with us

இந்தியா

வருங்கால வைப்பு நிதி பெறுவதில் புதிய விதிமுறைகள் அமல்.. என்னென்ன தெரியுமா?

Published

on

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் EPFO என்ற வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்பட்டு வரும் என்பதும் அந்த தொகை வட்டியுடன் ஊழியர்கள் விரும்பும் போது அல்லது ஓய்வு பெறும் போது கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதியை பெறுவதில் தற்போது புதிய விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

2022 ஆம் ஆண்டு விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணம் அளித்துள்ளது. குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கு EPF என்ற வருங்கால வைப்பு நிதி திட்டம் ஊழியர்களின் பாதுகாப்பு உள்ளது.

இந்த நிலையில் EPF கணக்கு வைத்திருப்பவர்களின் உரிமைகோரல்கள் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் எந்த ஒரு காரணமும் கூறாமல் யாருடைய கோரிக்கையும் நிராகரிக்கப்படக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில்
நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் EPF பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிதி தேவைப்படும் நேரத்தில் வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த நிலையில் EPF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுக்குப் பணம் தேவைப்படும்போது, விண்ணப்பித்தால் உடனே எவ்வித காரணமும் கூறாமல் அவர்களது EPF கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் தெளிவான காரணத்தை தெரிவிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என்றும், நிதியை வழங்க நீண்ட காலம் எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

EPFO தொடர்பான விண்ணப்பம் பெறப்பட்டால், அதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சகம் தனது புதிய வழிகாட்டுதலில் கூறியுள்ளது. படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரரிடமிருந்து ஏதேனும் குறைபாடு இருந்தால், தெளிவான காரணத்தை கூறி அதை நீக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும், அதை ஒரு காரணமாக எடுத்து தாமதம் செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்பாராத காரணத்தால் EPF குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பதாரர் புதிய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய அவரை அழைத்து உதவ வேண்டும் என்றும், அவருடைய முந்தைய விண்ணபத்தின் குறைபாடுகளை அவருக்கு விளக்கி உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

EPF குறித்த புகார்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக வந்த வண்ணம் உள்ளதால் மத்திய அரசு இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. மேலும் EPFO விண்ணப்பத்தை எந்தவொரு தெளிவான காரணத்தையும் தெரிவிக்காமல் நிராகரிப்பதாக அரசாங்கத்திற்கு நீண்ட காலமாக புகார்கள் வந்துள்ளதால் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!