தமிழ்நாடு

கொடைக்கானல் செல்ல இ-பாஸ் தேவையில்லை.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு, அதன்பின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நாளை அதாவது ஜூலை 5-ஆம் தேதி முதல் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதன்படி சுற்றுலா தலங்களுக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்க தோட்டக்கலை துறை தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக கொடைக்கானலுக்கு செல்லத் இ-பாஸ் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் நாளை முதல் சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா தலங்களை திறக்க தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றை திறக்க தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version